6 வழி சாலை திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : நில அளவை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

சென்னை அருகே பொன்னேரியை அடுத்த ஊத்துக்கோட்டை பகுதியில், 6 வழி சாலை அமைக்கும் பணிக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
x
சென்னை அருகே பொன்னேரியை அடுத்த ஊத்துக்கோட்டை பகுதியில், 6 வழி சாலை அமைக்கும் பணிக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை, 128 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6 வழி சாலை அமைக்கும் திட்டத்தில், ஊத்துக்கோட்டை பகுதியில் மட்டும், 18 கிராமங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், போராட்டம் நீடிக்கும் என எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்