இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.
இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு
x
இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.  கோடம்பாக்கத்தில் தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சீர்காழி சிவசிதம்பரம் , திரைப்பட பாடலாசிரியர் கபிலன் , நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டில், திரைக் கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள்,  எழுத்தாளர்கள் என கலைத்துறையில் சாதனை செய்தவர்கள் பாராட்டப்பட உள்ளதாகவும், விரைவில் மாநாடு தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்