வெளிநாட்டு பணத்தை மாற்றுவது போல திருட்டு : சென்னையில் சிக்கிய ஈரானிய கும்பல்

இந்தியாவின் பல இடங்களில் வெளிநாட்டு பணத்தை மாற்றுவது போல நடித்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த ஈரான் நாட்டினர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பணத்தை மாற்றுவது போல திருட்டு : சென்னையில் சிக்கிய ஈரானிய கும்பல்
x
இந்தியாவின் பல இடங்களில் வெளிநாட்டு பணத்தை மாற்றுவது போல நடித்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த ஈரான் நாட்டினர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் வெளிநாட்டினர் பலர் வருவதால் அங்கு வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 21 ஆம் தேதி அங்கு வந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணம் கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்தவரை திசை திருப்பிய அவர்கள், கல்லாவில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை லாவகமாக திருடி சென்றனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், மற்றொரு கடைக்கு சென்ற அந்த ஈரானிய கும்பல், இதே போன்று திருட்டு வேலையில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டது. 

Next Story

மேலும் செய்திகள்