புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரிக்கை : சென்னையில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மோட்டார் வாகன சட்டடத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரிக்கை : சென்னையில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதிய வாகன சட்டத்தால் பலருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் வாகன உரிமம் உள்ளிட்டவை தொடர்பான பணிகளை மாநில அரசிடமிருந்து, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்