"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்
தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆயுஷ்மான் திட்டத்தில் இதுவரை 38 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், அதில் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் உள்ள மக்களின் உடல்நலம் குறித்து அறிந்து, தேவையான சிகிச்சைகள் வழங்க 7 லட்சம் சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அஸ்வினி குமார் கூறினார்.
Next Story