"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
x
ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை பகுதியில் கல்லணை கால்வாயில் ஆய்வு செய்த அவர், ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட இடத்தில் எழுப்பியுள்ள கரையின் உயரம் போதாது என்றும், அதை மேலும் 3 அடி உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீர் திறப்பை  ஆயிரம் கனஅடியாக அதிகப்படுத்தி, கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பழைய கடன்களை தள்ளுபடி செய்து புதிதாக விவசாய கடன் வழங்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்