தீவிரவாதிகள் ஊடுருவல் - கோவையில் 2வது நாளாக சோதனை
தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த உளவுத் துறையின் தகவல் அடிப்படையில், கோவையில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக கமாண்டோ படைவீரர்கள் கோவை ரயில் நிலையத்தில் அதிரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் சரக்கு ஏற்றப்பட்டு இறக்கும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Next Story