நீச்சல் குளத்தில் கண்காணிப்பாளர் இல்லை - தண்ணீரில் மூழ்கி பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு

மாநகராட்சி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால், நீச்சல் குளத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் குளத்தில் கண்காணிப்பாளர் இல்லை - தண்ணீரில் மூழ்கி பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு
x
மாநகராட்சி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால், நீச்சல் குளத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புதூர் காந்திநகரை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் இருவர், தல்லாகுள​த்​தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் விளையாடி உள்ளனர். அப்போது, உள்ளே குதித்த பாலபிரபாகரன் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மற்றொரு மாணவன் நண்பனை தேடிய நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலே சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில், நீச்சல் குளத்தின் கண்காணிப்பாளர் இல்லாமல் இருந்ததும், இதனால், சிறுவனின் உயிர் பறிபோனதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்