கோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்
x
ஆயிங்குடி கிராமத்தில் உள்ள கருத்தபெரியான் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பூசாரிகள் மூவர் சாப்பிட்டுள்ளனர். ஊர் கட்டுப்பாட்டை மீறி அங்கு சென்றதாக கூறி, சமூகத்தை சேர்ந்தவர்கள் பூசாரிகளை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரில் மாற்றுச் சமூகத்தை சேர்ந்த, 5 பேரை இரவோடு இரவாக போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். ஆனால், போலீஸ் பாதுகாப்பில் நடந்த அன்னதானத்தில் எந்த பிரச்சினையும் இல்லாதபோது, சாதிய மோதலை டி.எஸ்.பி. தூண்டுவதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் பேராவூரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. தலைமையில் சமாதானம் செய்யப்பட்ட நிலையில், டி.எஸ்.பி.யை இடம் மாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்