ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு
ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 108 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு சவரன் தங்க நகை விலை அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் தொட்ட நிலையில், இன்று 28 ஆயிரத்து 968 ரூபாய் என்கிற அளவில் விற்பனை ஆகிறது. இந்த மாத தொடக்கத்தில் 26 ஆயிரத்து 480 ரூபாயாக இருந்த ஆபரன தங்கம் விலை தற்போது மீண்டும் 29 ஆயிரம் ரூபாய் நெருங்கியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Next Story