கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்

தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
x
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேரும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் முகாமிட்டுள்ள இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மீதி ஐந்து பேர் இலங்கை தமிழ் இஸ்லாமியர்கள் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இந்துக்களை போல மாறுவேடத்தில் இடுப்பதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் தமிழக காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதும், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்