1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்

காரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.
x
காரைக்குடி முத்து பட்டினத்தில், 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர். முத்துபட்டினத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்ச்சியில்  ஈடுபட்ட பிரபாகரன் மற்றும் அலமு பிரியா ஆகிய இருவரும் இந்த சாதனையை படைத்தனர். முதல் 15 நிமிடம் பிரபாகரன் 500 குறளையும், அடுத்த 15 நிமிடம் அலமு பிரியா 500 குறளையும் ஒப்புவித்து முடித்து இந்த சாதனையை படைத்தனர். அவர்களுக்கு உலக சாதனை சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்