விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
கும்பகோணத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் வெளி மாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் வெளி மாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் கும்பகோணம் புறவழிச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் உருவாகி வரும் விநாயகர் சிலை 500 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Next Story