சென்னை அண்ணா நகரில் சட்டவிரோதமாக வெளிநாட்டு தொலைப்பேசி இணைப்பு - 5 பேர் கைது
சென்னை அண்ணா நகரில் சட்டவிரோதமாக டெலி கம்யூனிகேசன் நிறுவனம் நடத்தி வந்த 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரில் சட்டவிரோதமாக டெலி கம்யூனிகேசன் நிறுவனம் நடத்தி வந்த 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனுமதியின்றி, சிம் பாக்ஸ் மூலமாக வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, உள்ளூர் அழைப்பாக மாற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயல்பட்டு வந்ததாக தொலை தொடர்புத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாநகரில் உள்ள தங்கம் காலனியில் இயங்கி வந்த அந்த டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தை போலீசார் சோதனையிட்டு 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தொலைத்தொடர்பு உபகரணங்கள் , ஆயிரத்து 500 சிம்கார்டுகள் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர்.
Next Story