முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
x
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர்  கடந்த மாதம் 23ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வழக்கை விசாரித்த தனிப்படை போலீசார் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திக் ராஜாவை கைது செய்தனர். அவரை சிபிசிஐடி போலீஸ் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனிடையே இந்த வழக்கை முதலில் விசாரித்த தனிப்படை ஆய்வாளர்கள் பெரியசாமி  நாகராஜன், பர்ணபாஸ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீசார் அவர்களிடமும் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் சில முக்கிய நபர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என தெரிய வந்துள்ளது.... 

Next Story

மேலும் செய்திகள்