சேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
சேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
x
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில்  பங்குனி ஆற்றின் மீது உள்ள அணைக்கட்டு சேதம் அடைந்து  உடையும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்குனி அணையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பங்குனி அணைக்கட்டு  உடையும் பட்சத்தில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்