கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது
கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி,  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீரானது பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர் மற்றும் மல்லாங்கிணறு, பாத்திமாநகர் சூலக்கரை, ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள். 

சிதம்பரத்தில்  அரை மணிநேரம் கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட  பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால்  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்