கோவையில் பயிற்சி மருத்துவர்கள் தர்ணா : உதவித்தொகை வழங்கவில்லை என புகார்

கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவையில் பயிற்சி மருத்துவர்கள் தர்ணா : உதவித்தொகை வழங்கவில்லை என புகார்
x
கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம் முதல் 3 மாதமாக உதவித் தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்றனர். இதையடுத்து மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பாக  பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்