இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் : உயிர்சேதம் ஏற்படும் முன் சீரமைக்க கோரிக்கை

சிதம்பரம் அருகே, சக்திவிளாகம் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் : உயிர்சேதம் ஏற்படும் முன் சீரமைக்க கோரிக்கை
x
சிதம்பரம் அருகே, சக்திவிளாகம் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து  தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அங்கன்வாடி மையத்தில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை  முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ள மக்கள், உயிர்சேதம் ஏற்படும் முன் கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்