வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் : போலீசார் தீவிர விசாரணை - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு, தாம்பரத்தில் மர்ம கும்பல் ஒன்று வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் : போலீசார் தீவிர விசாரணை - வெளிவந்த அதிர்ச்சி தகவல்
x
செங்கல்பட்டு, தாம்பரத்தில் மர்ம கும்பல் ஒன்று வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளை போல சுற்றித்திரிந்த 17வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகளை சந்தேகத்தில் விசாரித்துள்ளனர். விசாரணையில் கும்பல் ஒன்று மகாராஷ்டிராவில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமிகளிடம் இருந்த போலி ஆதார் கார்டுகள், போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை
குழந்தைகள் நல குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


Next Story

மேலும் செய்திகள்