"பாத்ரூமில் வழுக்கி விழுந்த 2 ரவுடிகள்" - "மாவு கட்டுகளின்றி ரவுடிகள் சிறையில் நடமாட்டம்" : போலீசார் கூறியது பொய்யா என சந்தேகம்

பாத்ரூமில் வழுக்கி விழுந்து 2 ரவுடிகளின் கை உடைந்து விட்டதாக போலீசார் கூறிய நிலையில், இருவரும் கையில் மாவு கட்டுகள் எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாத்ரூமில் வழுக்கி விழுந்த 2 ரவுடிகள் - மாவு கட்டுகளின்றி ரவுடிகள் சிறையில் நடமாட்டம் : போலீசார் கூறியது பொய்யா என சந்தேகம்
x
சிதம்பரத்தில் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறி பிரபல ரவுடிகள் சுரேந்தர் மற்றும் சுபாஷ் உள்ளிட்ட 4 பேரை   அண்ணாமலை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களை செய்தியாளர்களிடம் காட்டும் போது ரவுடிகள் சுரேந்தர் மற்றும் சுபாஷின் கைகளில் மாவு கட்டு காணப்பட்டது. இருவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு ரவுடிகளின் கைகளில் மாவு கட்டு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. கை உடைந்த சுவடே இல்லாமல் அவர்கள் நடமாடி வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீப காலமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்ட பின், சிலரது கைகள் உடைந்து மாவு கட்டு போட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும். அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அது போல் நடந்த இந்த சம்பவம் தற்போது பொய் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உயர் அதிகாரிகளை திருப்திபடுத்த போலீசார் மாவு கட்டு நாடகம் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்