அவதூறாக செய்தியை வெளியிட்டதாக குற்றச்சாட்டு : வார இதழ் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு

தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவதூறாக செய்தியை வெளியிட்டதாக குற்றச்சாட்டு : வார இதழ் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு
x
தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு தொடர்ந்துள்ளார். திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நளினிதேவியிடம் அமைச்சர் சண்முகம் புகார் மனு அளித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் வெளியான இதழில் சிலை கடத்தலில் தனக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அந்த வார இதழுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்