விபத்தில் சிக்கியவரை மீட்ட அமைச்சர்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே நூம்பல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே நூம்பல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விபத்தில் சிக்கியவரை மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்ஸில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றார்.
Next Story