சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரயில்கள் : ஒரு மணி நேரம் தாமதம்- பயணிகள் அவதி

விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே சிக்னலில் நேற்றிரவு 11.15 மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது.
சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரயில்கள் : ஒரு மணி நேரம் தாமதம்- பயணிகள் அவதி
x
விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே சிக்னலில் நேற்றிரவு 11.15 மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், பொதிகை அதி விரைவு ரயில், மண்ணை அதிவிரைவு ரயில் மற்றும் பாண்டியன் அதிவிரைவு ரயில் ஆகியவை விழுப்புரம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள், ஒரு மணி நேரம் போராடி சிக்னல் கோளாறை சரிசெய்தனர். தொடர்ந்து, நடுவழியில் நிறுத்தப்பட்ட மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்