அத்தி வரதர் உற்சவத்தின் 48 வது நாள் : வெறிச்சோடிய வரதராஜ பெருமாள் கோயில்

காஞ்சிபுரம், அத்திவரதர் உற்சவத்தின் 48 வது நாளும், உற்சவத்தின் கடைசி நாளுமான இன்று , வரதராஜ பெருமாள் கோயில் வெறிச்சோடியது.
அத்தி வரதர் உற்சவத்தின் 48 வது நாள் : வெறிச்சோடிய வரதராஜ பெருமாள் கோயில்
x
காஞ்சிபுரம், அத்திவரதர் உற்சவத்தின் 48 வது நாளும், உற்சவத்தின் கடைசி நாளுமான இன்று , வரதராஜ பெருமாள் கோயில் வெறிச்சோடியது. அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களும், பக்தர்களும் நேற்று இரவு வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், இறுதி நாளாக இன்று, வசந்த மண்டபம் முழுவதும்  காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், துப்புரவு பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், சுகாதாரத்  துறை ஊழியர்கள் வழக்கமான பணியை செய்து வருகின்றனர். நேற்று இரவு வரை லட்ச கணக்கான மக்கள் வந்து சென்ற வரதராஜ பெருமாள் கோயில் வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்