முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் - அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி ஆற்றங்கரை யோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தண்ணீர் திறந்து விடும்போது ஆற்றில் இறங்கி, குளிப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் கேட்டு கொண்டார்.கனமழை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நீலகிரிமாவட்டத்தில்  முதலமைச்சர் உத்தரவுப்படி மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொழில் முதலீடுகளை ஈர்க்கவே முதலமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதாகவும், அதை குறை கூறும் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை என்றும்  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்