திருவள்ளூரில் 3 இடங்களில் ஏ.டி.எ.ம் மையங்களில் கொள்ளை முயற்சி - கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

ஆந்திர வங்கிகளுக்கு சொந்தமான 3 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து இன்று அதிகாலை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூரில் 3 இடங்களில் ஏ.டி.எ.ம் மையங்களில் கொள்ளை முயற்சி - கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
திருவள்ளூரில் உடளள காக்களூர் மற்றும் ராமாபுரம் பேருந்து நிறுத்த பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள பாங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் மற்றும் ஆந்திர வங்கிகளுக்கு சொந்தமான 3 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து இன்று அதிகாலை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.காவலாளிகள் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு,பயங்கர ஆயுதங்களுடன் இயந்திரங்களை உடைக்க கொள்ளை கும்பல் முயன்றுள்ளது. இயந்திரங்களை உடைக்க இயலாத நிலையில், அவற்றை சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியுள்ளது.தகவலறிந்து வந்த போலீசார் சி.சி.டி.வி. பதிவுகள் அடிப்படையில் த​லைமறைவான கும்ப​லை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்