சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை : பவுர்ணமி தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் அனுமதி

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை : பவுர்ணமி தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் அனுமதி
x
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்