பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி- 5 அறைகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டம் முத்துலாபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஆலை ஒன்றில் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி- 5 அறைகள் தரைமட்டம்
x
விருதுநகர் மாவட்டம் முத்துலாபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஆலை ஒன்றில் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பேன்சி ரக பட்டாசுகளை உலர வைக்கும் நிகழ்வின் போது, இந்த கோரவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில், ஐந்து அறைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேகமாக வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். ஆமத்தூர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்