தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு : சவரன் ரூ.28,896 ஆக உயர்ந்தது
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் நிலை உருவாகி உள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 612 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story