ஆடித் திருவிழாவை முன்னிட்டு இரண்டு தேர்கள் வலம்வந்ததால் களைகட்டிய குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் இருவேறு பகுதிகளில் அம்மன் கோயில் தேரோட்டங்கள் களைகட்டின.
ஆடித் திருவிழாவை முன்னிட்டு இரண்டு தேர்கள் வலம்வந்ததால் களைகட்டிய குடியாத்தம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் இருவேறு பகுதிகளில் அம்மன் கோயில் தேரோட்டங்கள், களைகட்டின. காளியம்மன்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் களைகட்டியது. அலங்கரிக்கப்பட்ட தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள், பரவச தரிசனம் செய்தனர். வழி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள், அம்மனுக்கு பூ, பழம் கொடுத்து ஆராதனையுடன் வணங்கினர். இதேபோல், புதுப்பேட்டை பகுதியில் உள்ள படவேட்டு எல்லையம்மன் கோயில் தேரும் வீதிகளில் வலம் வந்தது. இசைவாத்தியம் முழங்க சிலம்பாட்டத்துடன் களைகட்டிய தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்