"மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் வர உள்ளது" - சேலம் மாவட்ட ஆட்சியர்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிக அளவில் இருக்கும் என்பதால், பொதுமக்கள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் வர உள்ளது - சேலம் மாவட்ட ஆட்சியர்
x
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிக அளவில் இருக்கும் என்பதால், பொதுமக்கள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகம், கேரள மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபிணி மற்றும் அதன் துணை அணைகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைப்பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் யாரும் குளிக்கவோ, செல்பி படங்கள் எடுப்பதையும் முற்றிலும் தடுத்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்