சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு : முன்கூட்டியே வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு : முன்கூட்டியே வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்
x
உள்நாட்டு விமான முனையத்திற்கு பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும்,  பன்னாட்டு விமான முனையத்திற்கு பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும் வர வேண்டும், திரவ பொருட்கள், அல்வா, ஊறுகாய், ஜாம்  போன்றவைகள் எடுத்து செல்லாமல் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கார் பார்க்கிங், பயணிகளை சோதனையிடும் பகுதி, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்குகள் கையாளும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் 31ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்