விமானம் தரையிறங்கிய போது சக்கரம் இயங்காததால் பரபரப்பு
டெல்லியில் இருந்து வந்த விமானம், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து வந்த விமானம், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து 138 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் சென்னை வந்த விமானம், தரையிறங்கிய போது விமானத்தின் சக்கரங்கள் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த விமானி , விமானத்தை தரையிறக்காமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்தார். இதையடுத்து, தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானம் மீண்டும் தரையிறங்கிய போது திடீரென சக்கரங்கள் இயங்கியதால், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story