மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை - பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து...
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பில்லூர் அணையில்இருந்து உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூழல் சுற்றுலா நடத்தப்படும் பரளிக்காடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் படகு இல்லம் நீரில் மூழ்கியது. இதனையடுத்து சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story