முகிலனை மறைத்து வைத்ததாக, அவரது நண்பர் கைது
முகிலனை மறைத்து வைத்திருந்த புகாரில், அவரது நண்பரும், 74 வயது முதியவருமான விஸ்வநாதன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மாயமான முகிலன், ஆந்திராவில் மீட்கப்பட்டார். அவருடன் நீண்ட நாள் பயணித்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில், தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கரூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். முகிலனுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்தது, அவரை மறைத்து வைத்தது என, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விஸ்வநாதன், காவிரி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் என்பதும், 74 வயது முதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பிறகு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
Next Story