உதகையில் பலத்த காற்றுடன் கனமழை

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
உதகையில் பலத்த காற்றுடன் கனமழை
x
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுக்காவில்  உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஊட்டி - கூடலூர் சாலையில்  பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மரங்களை அகற்றி சாலையை சீரமைத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்