இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
x
மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாடக்குளம் பகுதியில், கந்தசாமி நகரை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் நேற்று இரவு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது, இதையடுத்து, எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வரும் மூன்று நபர்கள் பாலகுமாரின் இருசக்கர வாகன பூட்டை உடைத்து திருடிச்  செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்