ஆயுள் கைதியை முன் விடுதலை செய்ய மறுத்த உத்தரவு : "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது"
ஆயுள் கைதியை முன் விடுதலை செய்ய மறுத்த உத்தரவு சரியா தவறா என்பது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விவாதிக்க முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாப்பிரெட்டிபட்டியை அடுத்த இரணியன்அல்லி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்ற ஆயுள் தண்டனை கைதியின் தாய் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், செந்திலின் முன் விடுதலை கோரும் மனுவை பரிசீலித்த பின்னரே விடுதலை செய்ய முடியாது என உள்துறை முடிவெடுத்து உள்ளதாக கூறினார். இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் நடைபெறவில்லை என்றும், அதேசமயம் அரசு எடுத்த முடிவு சரியா, தவறா என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது என்றும் கூறினார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
Next Story