ஆபத்தான ஓட்டுவீட்டில் செயல்படும் அங்கன்வாடி...
புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த ஆவிச்சிப்பட்டியில் ஆபத்தான ஓட்டுக் கட்டடத்தில் அங்கன்வாடி செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கட்டடத்துக்கு பதிலாக எட்டரை லட்சம் ரூபாயில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டான நிலையில், அது திறக்கப்பட வில்லை. பள்ளிகள் பலவற்றில் மாணவர்களே இல்லாத நிலையில், 25 குழந்தைகள் அங்கன்வாடிக்கு வருவதை சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story