லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலீஸ்காரர் சிறையில் அடைப்பு

லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலீஸ்காரர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலீஸ்காரர் சிறையில் அடைப்பு
x
சென்னை  மாதவரத்தை சேர்ந்த லாரி உரிமையாளரான தொழிலதிபர் அசோக்குமாரை  தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் பரமேஸ்வரன் , நிதி பிரச்சினை தொடர்பாக அசோக்குமார் மீது புகார் வந்துள்ளதாக கூறியுள்ளார் .அவர் கூறிய படி அசோக்குமார் நேரில் ஆஜராகாத நிலையில், அவரது அலுவலகத்துக்கு வந்த பரமேஸ்வரன் வழக்கை முடித்து வைக்க 15 லட்சம்  ரூபாய் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.அசோக்குமார் பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரமேஸ்வரன் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் . இது குறித்து அசோக்குமார் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்  போலீசார் விசாரித்ததில் , குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் பரமேஸ்வரன் அண்மையில் மீண்டும் பணியில் சேர்ந்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. தொழிலதிபரை பணம் பறிக்கும் நோக்கத்தோடு மிரட்டிய அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்