பொதுவாழ்க்கையில் இருந்து முழுவதுமாக விலகுவதாக தீபா அறிவிப்பு

பொதுவாழ்க்கையில் இருந்து முழுவதுமாக விலகுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
x
இதுதொடர்பான அறிவிப்பை, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தீபா குறிப்பிட்டுள்ளார்.தமக்கென்று குடும்பம் உள்ளதாகவும், அது தான் முக்கியம் எனவும் தீபா தெரிவித்துள்ளார்.குழந்தை பெற்றுக் கொண்டு கணவருடன் வாழவே, தமக்கு ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.பேரவையை அ.தி.மு.க- உடன் இணைத்து விட்டதாக கூறியுள்ள தீபா, தொண்டர்கள் விருப்பம் இருந்தால் அதிமுகவில் சேர்ந்து கொள்ளலாம் எனவும்,தமக்கு அரசியலே வேண்டாம் என்றும், தொலைபேசியில் அழைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதனையும் மீறி தொண்டர்கள் தம்மை அழைத்தால் காவல்துறையிடம் புகார் செய்வேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து, தன்னை  துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தீபா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்