நெல்லை முன்னாள் மேயர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
x
நெல்லை ரெட்டியார்பட்டியில் தி.மு.க. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய 3 பேர் கடந்த 23 ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.  பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படையினர்,  தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினரான மதுரையை சேர்ந்த சீனியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர். காழ்ப்புணர்ச்சியால் கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக சீனியம்மாள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக, சீனியம்மாளின்  மகன் கார்த்திகேயனை நேற்று மாலை பிடித்த தனிப்படை போலீசார், அவரிடம் பாளையங்கோட்டை ஆயுதப் படை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 பேரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கார்த்திகேயனுடைய  காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில்,கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதன் மூலம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்