மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் - கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்பு

தேர்தல் பணி ஆலோசனை வழங்குவதில் பிரபலமான பிரசாந்த் கிஷோருடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கிறது.
மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் - கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்பு
x
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிரபல தேர்தல் பணி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பல்வேறு புதிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், பொது பிரச்சனைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும் கிராம சபை கூட்டத்தை பொது மக்களுக்கு கொண்டு செல்லுதல், என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்