வேலூர் மக்களவை தொகுதியை முற்றுகையிட்ட அமைச்சர்கள் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம்

கட்சிக்கு வந்துள்ள சோதனையில் இருந்து வெற்றி பெறவே அமைச்சர்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியை முற்றுகையிட்ட அமைச்சர்கள் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம்
x
வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணி செய்ய அதிமுக தலைமை பணிக் குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், இக்குழுவின் ஆலோசனை கூட்டம்,குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, சோதனையில் இருந்து வெற்றி பெறவே, அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக கூறினார். இதனிடையே, குடியாத்தம் நகர பகுதிகளில் சமூகநலத்துறை அமைச்சர்   சரோஜா வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்

பொய் சொல்வதில் திமுகவினர் வல்லவர்கள் - ஆர்.பி.உதயகுமார்



வாணியம் பாடியில் வீதி  வீதியாக  சென்று  ஏ .சி  சண்முகத்துக்கு வருவாய்  துறை  அமைச்சர்  ஆர் .பி  உதயகுமார்  ஆதரவு திரட்டினார் அப்போது, பொதுமக்கள்  மத்தியில்  பேசிய அவர், பொய் சொல்வதிலே திமுகவினர்  வல்லவர்கள் என புகார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்