முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  1996ம் ஆண்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி, நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரை பெற்றவர் என தெரிவித்துள்ளார்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள ஸ்டாலின், தி.மு.க.  நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்