நோயாளியை திடீரென வெளியேற்றிய மருத்துவர்கள் - மாதர் சங்கத்துடன் சேர்ந்து கம்யூ. கட்சியினர் போராட்டம்
விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த செல்வி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த செல்வி, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், திடீரென செல்வியின் உடல் நலம் குணமாகிவிட்டதாக கூறி மருத்துவர்கள் அவரை மருத்துவமனையை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், உடலில் உள்ள ரத்தக் கட்டு கரையாமல் இருந்ததால், அது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் செல்வி தெரிவித்துள்ளார். இதையடுத்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன்பு செல்வியின் தலைமையில் கம்யூனிஸ்ட் மற்றும் மாதர் சங்கத்தினர் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து செல்விக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story