உதகை, தொட்டபெட்டா பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை
நீலகிரி மாவட்டம் உதகை, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம், அவலாஞ்சி, உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. கடும் குளிர் நிலவுவதால் ஆங்காங்கே பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.அதிக அளவாக அவலாஞ்சியில் 84 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story