குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி - ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி கோவையில் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி - ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது
x
கேரளாவை சேர்ந்த, நவ்ஷாத், என்பவரை, சிவா என்பவர் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்துள்ளார். கோவை சிவானந்த காலனிக்கு வந்த, நவ்ஷாத் மற்றும் அவரது நண்பர் விக்னேஷிடம், வியாபாரிகள் என கூறி, நான்கு பேர் கொண்ட கும்பல், தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் எனவும் கையில் கொண்டு வந்திருந்த பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். உடனே பயத்தில் ஆழ்ந்த இருவரும் கையில் இருந்த 13 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். பின்னர், 4 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றது.இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் நவ்ஷாத் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேரந்த சிவா, அஜித், அரவிந்தன் மற்றும் கோவையைச் சேர்ந்த பத்மநாபன், நடராஜ்,கமலேஷ் என்பது தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்