அத்திவரதர் உற்சவம் - முதலமைச்சர் நாளை தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார்.
அத்திவரதர் உற்சவம் - முதலமைச்சர் நாளை தரிசனம்
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார். கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர், அங்கிருந்து நாளை காஞ்சிபுரத்திற்கு செல்கிறார். தற்போது அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நாளை அவர் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், அப்போது அவர் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்